districts

img

‘முத்தமிழ்த்தேர்’ ஊர்திக்கு வரவேற்பு

நாமக்கல், நவ.26- நாமக்கல்லுக்கு வந்த ‘முத்தமிழ்த்தேர்’ அலங்கார ஊர் திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எழுத்தாளர் - கலைஞர் குழுவின் சார் பில் உருவாக்கப்பட்ட ‘முத்தமிழ்த்தேர்’ அலங்கார ஊர்தி  நாமக்கல் பூங்கா சாலைக்கு வந்தது. இதனை, மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வரவேற்று  பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து ஊர்தியினுள் இடம் பெற்றிருந்த கருணாநிதி சிலைக்கு அனைவரும் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இந்த ஊர்தியில் கருணாநிதி யின் திரை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை சார்ந்த புகைப் படங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள், மாணவ, மாண விகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும், அங்கு கலைநிகழ்ச்சிகளும், சமூக நலத்துறை சார்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண்  குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்கிற வாசகம் பொறிக்கப் பட்ட பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட  ஆட்சியர் ச.உமா, சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, துணைத்தலை வர் செ.பூபதி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) க.பிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், நக ராட்சி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.